தவறான பாடலும் திருத்தங்களும்

ஒரு தமிழ் பாடல் ஆடியோவை நேற்று எனக்கு ஒரு நண்பர் அனுப்பி இருந்தார் . பின்னர் அது நான் பங்கு கொள்ளும் ஒரு வாட்சப் குழுவிலும் பகிரப்பட்டிருந்தது.

யாரோ ஒரு மாணவி சமையல் வகுப்பு படித்து முடித்த ஆவேசத்தில் கிடைத்த பல பொருள்களையும் வாரி எடுத்து ஒரு ஒரு சமையல் காணொளி செய்தது போலிருந்ததால், இந்த பாடலை நான் முதலில் புறக்கணிக்கதான் விரும்பினேன் ஆனால் இது எனது குருநாதரின் சீடர்களின் குழுவில் ஒரு குழந்தைக்கு கற்றுக் கொடுக்க முயற்சி நடந்ததைக் கண்டபோது, இதில் காணும் தவறுகளை சுட்டிக்காட்டி சரியான விஷயங்களை மட்டும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லட்டும் என்ற எண்ணத்தில் தான் இங்கு எனது கருத்துக்களை பகிர விரும்பினேன் .
இந்த பாடலை எழுதிய , பாடிய , அதை பலருடனும் பகிர்ந்த மனங்களை புண்படுத்துவதற்காக அல்ல . அப்படி உங்களுக்கு தோன்றினால் தயவு செய்து மன்னிக்கவும்.



பாடல் வரி சரிஎனது கருத்து
1
உடம்பினை போலொரு ஆலயம் இல்லை
2
உயிரினைப் போல் ஒரு இறைவனும் இல்லை
3
ச்ரேணிதம், சுக்கிலம் போல் படைப்புகள் இல்லை ச்ரேணிதம் இல்லை சுரோணிதம். உடல் என்ற படைப்புக்கு காரணம் ஆவதால் படைப்புகளுக்கு படைப்பு என்று கொள்ளலாம்
4
ஆத்மனை போலொரு இயக்கமுமில்லை பிராணன் என்று கூறியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்
5
நல்ல மனதினை போலொரு நண்பனுமில்லை
6
தீய நினைவினைப் போலொரு பகைவனுமில்லை
7
மன சக்தியை போலொரு ஆற்றலுமில்லை
8
அருட்ஜோதியை போலொரு ஆத்ம பிதா இல்லை இறைவனை உயிர் , ஜீவன், ஈஸ்வரன் என்பது போல அருட்பெரும் ஜோதி என்று கொண்டால் அது தான் அப்பன் , அம்மை, பிள்ளை எல்லாமே . இல்லை இந்த பாடலை இயற்றிய மனிதரின் மனதில் வள்ளலாரை தன் ஆத்ம பிதாவாக தரித்து இருந்தால் அர்த்தம் மாறும்
9
ஒழுக்கத்தை மிஞ்சிய வாழ்க்கையுமில்லை வாழ்வில் ஒழுக்கம் தேவை ஆனால் அதுவே வாழ்வாகாது . எந்த ஒழுங்கும் இல்லாத கல்லிலும் சிற்பம் வரலாம்
10
ஒடுக்கத்தை மிஞ்சிய தியானமுமில்லைதமிழில் ஒடுக்கம் என்பதற்கு பல அர்த்தங்கள் இருக்கின்றன. மன ஒடுக்கம் குறித்து இங்கு சொல்லி இருந்தால் அது தியானம் மூலம் நிகழ்கிறது

அடக்குவதை ஒடுக்கம் எனலாம் (ஒடுக்கப்பட்டவர்கள் = அடிமை)
ஆவி நீராக மாறுவதை ஒடுக்கம் என்பதுண்டு
11
நிஷ்டையை மிஞ்சிய யாகமுமில்லையாகம் ஒரு வினை, நிஷ்டை என்பது வினை கடந்த நிலை.
யாகம் செய்வதால் கிடைப்பது நிஷ்டையால் கிடைக்கும் என்று கருதி சொல்லியிருந்தால் அது குழந்தைத் தனம்
12
நிர்விகல்பத்தை மிஞ்சிய மோக்ஷமுமில்லைமோட்சத்திற்கு பலவழிகள் அதில் நிர்விகல்ப சமாதி ஒன்று என்று கொண்டால் அது பெரிய வழி என்பது பொருந்தி வரலாம். ஆனால் சித்த பரம்பரைகளில் இரண்டுக்கும் வேற்றுமை இருப்பதாக தெரியவில்லை . எனினும் மரணம் வரை காத்திருக்க வேண்டும் இதைக்குறித்து அறிய
13
கருணை போலொரு அமரனுமில்லைஅமரன் என்றால் தமிழில் அமரத்தன்மை எய்தியவன் (immortal) என்று பொருள் . மேற்கண்ட சமாதி அடைந்தவன் என கொள்ளலாம். கருணை உள்ளவன் அமரத்தன்மை நோக்கி செல்பவன் என்றால் கூடுதல் சரி .

அமரன் / தேவன்/ தெய்வம் எல்லாம் தமிழகத்தில் ஒரே அர்த்தம் கொண்டவை
14
கர்வத்தை போலொரு அழிவேதும் இல்லை
15
தன்னை அறிந்திட தனக்கொரு கேடில்லைதன்னை அறிவது தான் நமது வாழ்வின் இலட்சியம். அதுவரை நமக்கு கேடு ஒன்று அல்லாது வேறு ஒன்றுமே இல்லை என்பது தான் உண்மை
16
பிறரை நீ அறிவதில் பயனேதும் இல்லைதன்னை அறிபவனுக்கு பிறரையும் அறிய முடியும் . தன்னை அறிய முயலாது பிறரை அறிய பாடுபட வேண்டாம் என்று வேண்டுமெனில் கூறலாம். ஆனால் இந்த பொருள் உலகத்தில் பிறரை புரிந்து செயல்படுவது தான் புத்திசாலித்தனம்
17
அறிவினை போலொரு ஆரம்பம் இல்லை அறிவு ஆரம்பம் இல்லை . சம்பளம் வாங்குவது போல ஒரு வேலை இல்லை என்று சொல்வது போல இருக்கிறது
18
ஆசையை போலொரு முடிவுமே இல்லை மிக மிக தவறான வார்த்தை பயன்பாடு, அடுத்த தலைமுறை ஆசைப்பட தெரியாமல் போகலாம் அல்லது ஆசைப்படுவது தான் கடைசி முடிவு என்றும் தவறிப்போகலாம்
19
அடக்கத்தை போலொரு ஆளுமை இல்லை ஆளுமை (personality) என்பது ஒரு மனிதரின் பல குணாதிசயங்கள் ஒன்று சேர்ந்த வெளிப்பாடு. அடக்கம், பணிவு இவை அதில் ஒன்று
20
தொடக்கத்தை போலொரு துணிச்சலுமில்லை தொடக்கம் எப்படி துணிச்சல் ஆகும் என்று இதை எழுதியவருக்கு அதை எழுத அந்த மனிதரின் மனதில் ஒரு மாயையைத் தோற்றுவித்த ஜீவனுக்கும் மட்டும் தான் தெரியும்
21
வார்த்தையை போலொரு அறிவிலி இல்லை அறிவிலி என்றால் பேதை / அறிவு இல்லாத ஒன்று என்று அர்த்தம் . வார்த்தை அறிவிலி எனில் இந்த பாடலை வார்த்தைகள் இல்லாமல் சைகை மொழியில் சொல்லி இருக்கலாம்
22
மௌனத்தையை போலொரு ஞானியுமில்லை மௌனம் ஞானிகளின் மொழி என்பது சரி. இந்த கண்ணோட்டத்தில் காணும்போது மேலே சொன்ன வார்த்தைகள் எல்லாம் ஞானமில்லாத போது வெளிப்படுபவை என்றும் வருகிறது.

உண்மையில் ஞானமில்லாதவர்கள் மௌனமாக இருந்து ஞானிகள் பேசினால் உலகம் உருப்படுமோ என்னவோ?
23
சிந்தையை போலொரு வியாதியுமில்லை சிந்தை இல்லாமல் எப்படி வாழ்வு இருக்கும் என்று எனக்கு தெரியவில்லை . நமது குழந்தைகளை சிந்திக்க கற்றுக் கொடுக்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை. இப்போது உலகின் மிகப்பெரிய நோய் சிந்தனைத் திறன் அற்றுக் கொண்டிருப்பதுதான்
24
சிரிப்பினை மிஞ்சிய மருந்து அது இல்லைசிந்திக்காமல் , டிஜிட்டல் திரைகளை நோக்கி சிரித்துக் கொண்டிருப்பது ஒரு மருந்தாகி வரும் காலம் இது . பிறரைக் காணும்போது புன்னகைக்கும் சிரிப்பு இப்போது காணக்கிடைக்காத ஒன்றாகி வருகிறது
25
உண்மையை போலொரு உத்தமனுமில்லை உத்தமன் என்ற வாக்கிற்கு பல அர்த்தங்கள் உண்டு. நல்லவன் , உயர்ந்தவன் , இறைவன், உண்மை பேசுபவன் என்று பலதும் . உண்மை உத்தமனாவது இல்லை, ஆனால் உண்மை வழியில் நடப்பவன் உத்தமன் ஆகலாம்.
26
பொய்யினை போலொரு அதமனுமில்லை மாபெரும் தவறு இந்த வரியில் இருக்கிறது

முதலில் அதமன் என்பது தமிழே இல்லை . சம்ஸ்க்ருதத்தில் இதன் அர்த்தம் 'உண்மையான ஒன்று' என்று கூறப்படுகிறது. யாராவது வடமொழி தெரிந்தவர்கள் ஆராய்ந்து சொல்லவும்
27
பொறாமையை போலொரு சோம்பலுமில்லை பொறாமை (jealous / envy) சோம்பல் (lazy). எங்கிருந்து இரண்டும் இணைக்கப்பட்டன என்று இறைவனுக்கும் தெரியாது சகோதரர்களே
28
புறம் பேசுவது போலொரு பாவமுமில்லை
29
கோபத்தை போலொரு எமதர்மனில்லை தன்னைத் தான் கொல்லும் சினம் என்பது வள்ளுவர் வாக்கு
30
மகிழ்ச்சியை போலொரு சமதர்மமில்லை மகிழ்ச்சி ஒரு நிலை அதன் எதிர் நிலை வருத்தம் . இவை இரண்டுக்கும் இடையில் இருப்பதை சமதர்மம் என்றால் கொஞ்சம் அர்த்தமிருக்கிறது
31
நம்பிக்கையை போலொரு தெய்வமுமில்லை வெறும் நம்பிக்கை எப்படி இறைவன் ஆகுமென்று தெரியவில்லை. ஜீவனில் நம்பிக்கை வைத்து வாழ்பவனுக்கு அந்த நம்பிக்கை சரியான வழிகாட்டும் என்பது வேண்டுமானால் உண்மை.
32
துரோகத்தை போலொரு வார்த்தையே இல்லை துரோகம் என்றொரு வார்த்தையே இல்லை என்று சொன்னால் பிதற்றல். துரோகம் போன்ற தீய வார்த்தை வேறு இல்லை என்று சொல்கிறாரோ என்னவோ
33
மரணத்தை போலொரு ஜனனமுமில்லை ஆண்டவா இந்த பாட்டெழுதிய பெரியவரை சீக்கிரம் கண்டு பிடித்து அவரை மறுபடி பிறக்க உதவ வேண்டும்
34
ஜனனத்தை போலொரு தொடக்கமுமில்லை இந்த வாழ்வில் மட்டும் ஜனனம் ஒரு துவக்கம்
35
இயற்கையின் ஆணையை ஏற்றிடும் மனமே இனிதுடன் ஈசனுள் வாழ்ந்திடும் தினமே
36
பசியினை போலொரு கொடியவன் இல்லை
37
பசி தீர்ப்பவன் போலொரு இறைவனுமில்லை
38
உணவினை உயிர்களுக்கு கொடுப்பவன் எவனோ அவனே உலகின் ஈஸ்வரன் ஆவான்செடி, கொடி, மரம் மற்றும் பலியாகும் விலங்கினம் இவை எல்லாம் தான் உண்மையில் உணவு தருபவர்கள் என்று எனக்கு தோன்றுகிறது. அதை உருவாக்க ஒளி வீசும் ஞாயிறாக ஒளிரும் அப்பனும் , மாரியாக பெய்து தேடிவந்து நீர்கொடுத்து அவற்றை காத்தருளும் தாயும் இறை என்று சொன்னால் மிகையல்ல .

மாறாக ஏதோ காகிதத்தை கடையில் கொடுத்து உணவினை வாங்கி காரில் நிறைத்து கொண்டு சென்று உயிர் மூச்சு ஓடிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரையும் சிலை போல வரிசையில் நிறுத்தி ஒரு நேர பசியை நீக்கினேன் எனவே இனி நானும் ஈஸ்வரன் என்று நினைக்கும் என் பேதை மனமே நீ ஈஸ்வரத் தன்மைக்கு பதில் ஈனஸ்வர தன்மையில் தான் இனியும் இருக்கிறாய்!
39
சீவனும் சிவனும் ஒன்றென அறிவாய் சிவன் என்ற சொல்லுக்கு அர்த்தம் மங்களம் என்பது தான் ரிஷி பெருமக்கள் சொன்னது.

தமிழில் பரமன்/ பதி / இறை என்றெல்லாம் தான் அழைத்து வந்தார்கள் . ஜீவன் என்பதை தமிழில் பசு / உயிர் என்றுதான் குறிப்பிட்டிருந்தனர். வடமொழி குறைக்க தனித்தமிழ் வளர்க்க வேண்டி ஜ என்ற எழுத்துக்கு பதிலாக ச என்ற எழுத்தை போட துவங்கினார்கள். அப்படிதான் ஜீவன் சீவன் ஆகி இருக்க வேண்டும்.

சீவன் சிவனாவது ஒரு வாழ்வின் நோக்கம், ஆனால் அது ஏற்கனவே சிவன் ஆகிவிட்டது என்றால் பிறகு ஆன்மிகம் தேவையில்லை
40
இடகலை பிங்கலை சூக்சுமம் தெரிவாய்
41
வாசியை அடித்து அமுதத்தை உண்பாய்வாசி அடிக்க வேண்டிய ஒன்றல்ல அது நாம் பிடிக்க வேண்டிய திரு மூச்சு. வள்ளுவரின் வாக்கில் சொன்னால் அதை இறைவனின் அடி / தாள் என்று தான் குறிப்பு மொழியில் சித்தர்கள் சொல்லி வைத்தார்கள் . கால் பிடிக்க வேண்டிய ஒன்று அடிக்க வேண்டிய ஒன்றல்ல.

தாய் திருமகள் தன் பாலை சிறுகுழந்தைக்கு சமயம் வரும்போது சரியாக அவளாகத்தான் ஊட்டி விடுகிறாள். அவசரக் குடுக்கை குழந்தை வேண்டுமானால் கொஞ்சம் கூடுதல் அழுகலாம் அதைத் தவிர வேறொன்றும் செய்ய வேண்டியது இல்லை .
42
மரணமில்லா பெரு வாழ்வினை வாழ்வாய்